பாலினம் எத்தனை வகை?.... நம்மை தேடி ...

வணக்கம்.

 நான் ஜான். ஷ்ருஷ்டி மதுரை என்ற LGBTQ organization இருக்கிறது. LGBTQ என்றால் Lesbian, Gay, Bisexual ,Transgender & Queer. ஸ்ருஷ்டி என்பது மாற்று பாலினத்தவருகான (Gender queer) தமிழகத்தின் முதல் இலக்கியம் மற்றும் ஆராய்ச்சி வட்டமாகும். பாலினம் மற்றும் பாலியல் சார்ந்த பிரச்சினைகளை, சமூக பார்வையோடு அணுகி, அனைவருக்கும் இது குறித்த விழிப்புணர்வினை உ ருவாக்குவதே ஸ்ருஷ்டி-யின் நோக்கமாகும்.I am the Director of Srishti- ஷ்ருஷ்டி மதுரை  இதன் நிறுவனர்  கோபி ஷங்கர் (சர்வ புண்யன்).
ஆண், பெண்ணை தவிர்த்து இருபதிற்கும் (20) மேற்பட்ட பாலினங்கள் உள்ளது உங்களுக்கு தெரியுமா?

இந்த பாலின பாகுபாடு தான் துரிங் (Alan Turing) போன்ற பல வல்லுனர்களை கொன்றது.

அரிஸ்டாட்டில் (Aristotle)தொடங்கி ஹார்வே மில்க் (Harvey Milk) வரை நம் முன்தீர்மானிக்கபட்ட தவறான கருத்துக்கள் பற்றி ஒரு அலசல்...

Genders-க்கும் Sexuality-க்கும் உள்ள வேறுபாடு; பாலினம் என்பது நீங்கள் உங்களை எப்படிக் கருதிக் கொள்கிறீர்கள் என்பதே.
Sexuality என்பது யாரிடம் அல்லது எந்த பாலினத்தவரிடம் நீங்கள் பாலியல் நாட்டம் கொள்கிறீர்கள் அல்லது கவரப்படுகிறீர்கள், யாருடன் உங்கள் பாலியல் எண்ணங்கள் உள்ளது என்பது. Gender differs from sexuality, Gender orientation differs from Sexual orientation.

Gender என்றால்  நமக்குத் தெரிவது முதலில் ஆண், பெண். திருநர் (Transgender) திருநங்கைகள் (Transwomen) பற்றி நல்ல விழிப்புணர்வு இருக்கிறது.திருநங்கைகள் (Transwomen) என்போர் ஆணாக இருந்து பெண்ணாக மாறியவர்கள், பிறப்பிலே ஆணாக இருந்து தங்களைப் பெண்ணாக மாற்றிக் கொள்பவர்கள். ஆனால் பெண்ணாகப் பிறந்து ஆணாக மாற்றிக் கொள்வார்கள் சிலர். இவர்களைத் "திருநம்பிகள்" (Transmen) என்றழைக்கலாம். இவர்களைப் பற்றி அதிகமாகத் தெரிவதில்லை. ஆனால் இப்படிப்பட்ட மக்கள் நிறைய இருக்கிறார்கள்.ஆனால் இதையும் தாண்டி நிறைய பாலின (Gender) வேறுபாடுகள் இருக்கின்றன.

Gender என்ற சொல் ஒரு ஆண் அல்லது ஒரு பெண் அவர்களது  இனப்பெருக்க உறுப்புக்களினடிப்படையில் வகைப்படுத்தப்படுவது. ஆணென்றால் இப்படி பெண்ணென்றால் இப்படி மாதிரியான விடயங்கள் Gender - இல் இருக்கும். இதைத் தாண்டி Transsexuals, Transgenders என்பவர்கள் இப்படியாக சமூகம் வழங்கிய இனப்பெருக்க உறுப்புக்களினடிப்படையிலான ஒரு பாலினத்திலிருந்து மற்றொரு பாலினத்திற்கு மாறியவர்கள். Transsexuals என்பவர்கள் ஆணாகப் பிறந்து பெண்ணாக முழுமையாக மாறுகின்றவர்கள். இனப்பெருக்க உறுப்புக்கள் மட்டுமன்றி முழுவதுமே பெண்ணாக மாறுவது. இப்படி Transsexuals, Transgenders என்பவைகளைத் தாண்டி நிறைய பிரிவுகள் இவைகளின் கீழ் உள்ளன.
Gender (பாலினம்). அதில் என்னென்ன வகையெல்லாமிருக்கிறது ?

A.Common genders:1. ஆண்,
                                  2. பெண்.
B.திருநர்(Transgender)
  1.திருநங்கை(Transwomen)
  2.திருநம்பி (Transmen)


C.பால்புதுமையர்-                       Genderqueer

   1.பால் நடுநர்-Androgynous

   2.முழுனர்-pangender

   3.இருனர்-Bigender

   4.திரினர்-Trigender

   5.பாலிலி-Agender

 6.திருனடுனர்-Neutrois


   7.மறுமாறிகள்-Retransitioners

   8.தோற்ற பாலினத்தவர்-Appearance gendered

  9.முரண் திருனர்-Transbinary

 10.பிறர்பால் உடையணியும் திருனர்-Transcrossdressers

 11.இருமை நகர்வு-Binary’s Butch

12.எதிர்  பாலிலி-Fancy

13.இருமைகுரியோர்-Epicene

14.இடைபாலினம்-Intergender

15.மாறுபக்க ஆணியால் -Transmasculine

16.மாறுபக்க பெண்ணியல்-Transfeminine

17.அரைபெண்டிர்-Demigirl

18.அரையாடவர்-Demiguy

19.நம்பி ஈர்ப்பினள்-Girlfags

20.நங்கை ஈர்பினன்-Guydykes

21.பால் நகர்வோர்-Genderfluid

22.ஆணியல் பெண்-Tomboy

23.பெண்ணன் –sissy

24.இருமையின்மை  ஆணியல்-Non binary Butch

25.இருமையின்மை பெண்ணியல்-Non binary Femme

26.பிறர்பால்உடைஅணிபவர் –Cross dresser

முக்கியமாகக் குறிப்பிட வேண்டியவர்கள் Anderogynus people இவர்களை "பால்நடுநர்கள்" என்று அழைக்கலாம். இவர்கள் ஆணாக இருக்கலாம். பெண்ணாக இருக்கலாம். எதுவாகவும் இருக்கலாம். ஆனால் அவர்கள் தம்மை எந்த ஒரு பாலினமாகவும் நினைக்க மாட்டார்கள். திருநங்கைகள் தம்மை பெண் என அழைக்கப்பட விரும்புவார்கள். ஆனால் இவர்கள் தம்மை பாலினத்தின் அடிப்படையில் அழைக்கப்பட விரும்புவதில்லை. Gender Neutral என்ற வகையில் அழைக்கப்பட விரும்புவார்கள். அடுத்தவர்கள் Genderless people  பாலினமற்றவர்கள். Gender என்பதையே ஏற்க மறுப்பவர்கள். பாலினம் என்பது மனித ஆளுமையை அளவிட ஏற்றதல்ல பாலினத்தைத் தாண்டிய காரணகாரியங்கள் உண்டு என்று கருதுகிறவர்கள்.

இன்னொரு பிரிவினர் Bigenders தம்மை ஆணாகவும் பெண்ணாகவும் நினைத்துக் கொள்பவர்கள். Trigenders என்பவர்கள் தம்மை ஆணாகவும், பெண்ணாகவும், திருனராகவும் எண்ணிக் கொள்பவர்கள்.
Gender Fluid என்பவர்கள் ஒரு நாள் தம்மை ஆணாகவும் மற்றொரு நாளில் பெண்ணாகவும் கருதிக் கொள்பவர்கள். இவர்கள் தொகுப்பாக Gender Queer People என்போம். இன்னும் Gender non conformists  என்றெல்லாம் இருக்கிறார்கள்.


Sexual orientation-க்கும் Gender Orientation-க்கும் உள்ள வேறுபாடு Hetero Sexual- Straight எனப்படுவது பாலியல் ரீதியாக ஆண் பெண்ணிடமும், பெண் ஆண்களிடமும் கவரப்படுவது.

Gay, Lesbian பற்றிப் பரவலாக அறிந்திருக்கலாம். ஆணிடம் ஈர்ப்புக் கொள்ளும் ஆண்களை Gay என்றும் தமிழிழ் "நம்பிகள்" என்றும்  இவர்கள் Hetero Sexual தமது இணையிடம் எதிர்பார்க்கும் அன்பு, காதல், பாலியல் என அனைத்து உணர்வுகளையும் இன்னொரு ஆணிடம் எதிர்ப்பார்ப்பவர்கள். இதே இரு பெண்களிடையேயான உறவை Lesbian (நங்கை) எனலாம்.

Bi-Sexual இவர்கள் ஆண்களிடமும் கவரப்படுவார்கள் பெண்களிடமும் கவரப்படுவார்கள்.
இவை போன்று பரவலாக அறிந்த  பாலின ஈர்ப்பு (Sexual attraction) தவிர்த்து, Poly-Sexual, Asexual, Pansexual என்று நிறைய வகை உண்டு.

Asexual - எவ்வகைப்பாலினத்தவருடனும் பாலியல் நாட்டமில்லாதவர்கள். மக்கள் தொகையில் 1% இவர்கள் இருப்பதாக கின்ஸே (Kinsey) அறிக்கை கூறுகிறது.

Poly-Sexual - ஆண், பெண் தவிர திருநங்கைகள், திருநம்பிகள் என நான்கு வகையினருடனும் பாலியல் கவர்ச்சி உடையவர்கள்.

Pansexual - அனைத்துத் தரப்பினரிடமும் ஈர்ப்புடைய பாலினத்தவர்கள். இவர்கள் தாம் நாட்டம் கொள்ளும் நபர் குறித்த பாலியல் வேறுபாடுகளைப் பற்றிக் கண்டுகொள்ளாதவரகள். அந்நபர் ஆணாகவோ, பெண்ணாகவோ, திருநங்கையாகவோ, திருநம்பியாகவோ, Bigender, Trigender போன்ற எத்தகைய தன்மையுடையவரிடமும் இவர்கள் ஈர்க்கப்படுவார்கள்.

Girl Fags, Boy Dykes இவர்கள் Straight - வகையில் சேர்ந்த ஆண் பெண்கள்தான். இவர்களின் பாலியல் நாட்டமானது,

Girl Fags - வகைப் பெண்கள் Gay, Bisexual ஆண்களிடம் ஈர்ப்புக் கொள்வார்கள்

Boy Dykes - வகை ஆண்கள் Lesbian, Bisexual பெண்களிடம் ஈர்ப்புக் கொள்வார்கள்.

Intersex என்பவர்கள் ஆணாகவோ பெண்ணாகவோ கருதப்பட முடியாதவர்கள் பிறப்பின் போதே ஆண் பெண் பாலுறுப்புக்களுடன் பிறந்தவர்கள். ஆணின் இனப்பெருக்க உறுப்புடனும், பெண்ணின் இனப்பெருக்க பால் சுரப்பி உறுப்புடனும் Intersex என்று சொல்லலாம். தமிழில் இடையிலங்கம் எனலாம். ஆண் பெண் உறுப்புகளை ஒருங்கே கொண்டவர்களை True hermophrodites எனலாம். இவர்களை ஆணாகவோ பெண்ணாகவோ கருத முடியாது. இந்நிலையில் Gays, Lesbians, Bisexuals போன்ற பதங்களுக்கு பொருளில்லாமல் போய்விடுகிறது...

Androphilia - ஆண்களிடம் பாலியல் நாட்டம் கொள்பவர்கள்

Gynophilia - பெண்களிடம் பாலியல் நாட்டம் கொள்பவர்கள்.

சமுதாயத்தைப் பற்றி Gays, Lesbians பார்வை என்ன ? அவர்களைப் பற்றி சமுதாயத்தின் பார்வை என்ன ? இருவரிடையே உரையாடல் இல்லாததால் பிரச்சனை இருக்கிறது. அதை சிருஷ்டி சார்பாக ஆராய்ச்சி செய்து சொல்ல வேண்டும்...

Gays, Lesbians, Bisexuals என்பவர்கள் எப்படி உணர்வார்கள் என்று பார்க்கிறேன். அவர்களிடமுள்ள பிரச்சனை தங்களைத் தாங்களே அடையாளம் கண்டு கொள்வது.

தங்களின் உணர்வுகள் மற்றவர்களின் உணர்வுகளுடன் எப்படி வேறுபட்டுள்ளது என்பதை அறிவது.

என்னுடைய நண்பன் ஒரு பெண்ணை ரசிக்கிறான். ஆனால் நானோ ஒரு ஆண் அழகாக இருக்கிறான் என்று நினைக்கிறேன். இப்படித்தான் Gay - இன் நிலை இருக்கும்.

இப்படியான பாலியல் விருப்பத்தின் வேறுபாடுகள் இருக்கும்போது, பல வகையின(பாலின) மக்களை பார்க்கின்ற சமுதாயம் அவர்களை வெறும் உடல் ரீதியான இன்பத்துக்காக இணைந்தவர்கள் என்றே கருதுகிறது. ஆனால் உண்மையில் சமூகம் அவர்களைப் புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறது. அவர்களுக்குள்ளே என்னென்ன விதமான அழுத்தமிருக்கிறதென்றால், வெளியிலிருக்கும் சமூகத்தைப் பார்த்து, நான் இப்படியில்லை நானொரு Straight - தான் என்ற தூண்டலும், அதேவேளை தன்னுடலும் உணர்வும் விரும்பும் சமபாலுணர்வுத்தன்மையும் (Gay & Lesbian ) இருக்கும். இவ்விரு எண்ண முரண்பாட்டில் அவர்களது குழப்பம் இருக்கிறது. எல்லா விடயங்களுக்கும் வழிகாட்டிகள் உண்டு.

எத்தனையோ இயந்திரங்கள் குறித்துப் பேசுகிறோம். ஆனால் ஒரு மனிதனின் அடிப்படை உணர்ச்சியைப் புரிந்து கொள்ள இந்த சமுதாயம் ஒரு நல்ல பார்வையை கொடுத்ததில்லை. அவர்களை உடலுறவு இன்பத்தை நாடுபவர்கள், பெண்ணை (இழிவாக) நடத்துவது போல நடத்துவது, பகடி செய்வது மாதிரியிலான பிரச்சனைகள் சமுதாயம் அளிக்கிறது. இதனால் அவர்களுக்குள் இரட்டை வாழ்க்கை (Double Life) வாழ வேண்டியிருக்கிறது.

ஆணாக இருந்தால் தாய், தந்தை, தங்கையைக் கவனிக்கும் பொறுப்புடனும்,

பெண்ணாக இருந்தால் புகுந்த வீட்டிற்கு செல்லும் வகையில் நடந்து கொள்ளவும் வேண்டும் போன்ற செய்கைகளை மீறுவதாகத்தான் இந்த 
மாற்று பாலியல் ஈர்ப்பு உள்ளவர்கள்  நடந்து கொள்வார்கள்.
இவர்களது உணர்வு வெளிப்படும் போது இன்னொரு ஆணைத்தான் இவர்கள் தமது அனைத்து வகை உணர்வுகளையும் பகிர்ந்து கொள்வதற்காக தேடுவார்கள். பெண் சமபால்
விருப்பம் கொண்டோர் பெண்ணைத்தான் தேடுவார்கள். அதுதான் Gays, Lesbians...இது பாலுணர்வை மட்டுமே சார்ந்தது இல்லை
Straight - இல் உள்ள அதே காதல் அதே ஏக்கம், காதலன் தன்னுடனிருக்க வேண்டும், தோளில் சாய்ந்து கொள்ள வேண்டும், உணர்வுகளை, இன்ப துன்பங்களை பகிர்ந்து கொள்ள வேண்டும் இந்த மாதிரியான உணர்வுகளைத்தான் அவரகள் கொண்டிருக்கிறார்கள் எதிர்பார்க்கிறார்கள். ஆனால் இந்த மாதிரியான உணர்வுகள் எப்படி சிதறடிக்கப்படுகிறதென்றால், முக்கியமாக இரட்டை வாழ்க்கையினால் உள்ளுணர்வை விடமுடியாமலும் வெறும் பாலின்பத்தை நாடுவதில் மூலம் வடிகால் தேடுகிறது. நாம் (ஆண்) ஒரு பெண்ணிடம் ஈர்க்கப்படுகிறோம். ஆனால் நாம் அவர்களைப் ( சமபால் விருப்புடையோர்) போல் பூங்காக்களில் மட்டுமா உட்கார்ந்து இருக்கிறோம் ? (இணையாக எல்லா இடத்திலும் சுதந்திரமாகப் போய் வர முடிகிறது). ஏனிவர்கள் இப்படியிருக்கிறார்கள் ? அரசியலமைப்பு இன்னும் அவர்களை ஏற்றுக் கொள்ள வில்லை. 2009 - இல் சட்டப்பூர்வமாக்கினார்கள். இப்போது தவறான உறவு என்கிறார்கள். இது எங்களை அதிகமாக பாதித்தது. எங்களை ஏற்கெனவே சமூகத்தில் ஏற்றுக் கொள்ளாத நிலையில் அரசே ஏற்றுக்கொள்ளாத போது, எங்களின் உரிமைகள் எப்படியிருக்கும் ? எங்களை யார் புரிந்து கொள்வர் என்கிற ரீதியிலான கவலைகள் எங்களனைவருக்கும் இருக்கும். வெளிப்படுத்துதல் - coming out என்பது தன்னுடைய உறவினரிடமோ, நண்பரிடமோ, குடும்பத்தினரிடமோ வேறு யாரிடமோ தங்கள் உணர்வுகளைப் பகிர்ந்து கொள்வது, தங்கள் எப்படி மாறுபடுகிறோம் என்பதைப் பகிர்ந்து கொள்வது. இப்படிப்பட்ட பகிர்ந்தல் நம் சமூகத்தில் இல்லை. அதற்கான வடிகால்களை சமூகம் ஏறடுத்தவுமில்லை. இந்த மாதிரியான செயல்களை அங்கீகரிக்கணும். அரசியல் ரீதியாக அங்கீகரிக்க வேண்டும். என்பதுதான் எங்களின் முக்கியமான வேண்டுகோள்.




மூன்றாம் பாலினம் என்கிறோம். மேற்கத்திய சூழலில் தம்மை இந்த மாதிரி வெளிப்படுத்திக் கொண்டவர்கள் யார் ?

ப்ளேட்டொ ஒரு சமபால் விருப்புடையவர் (Same Sex attraction)-(Gay) என வரலாற்றாய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அடுத்து லியானார்டோ டாவின்சி, கடவுளும் மனிதனும் தொட்டுக் கொள்வது போல் ஓவியம் வரைந்த மைக்கேல் ஏஞ்சலோ ஆகியோர் சமபால் விருப்புடையோர். லியானார்டோ டாவின்சி ஒரு சமபாலின விருப்புக் கொண்டவர் என்பது வரலாற்றுப் பதிவுகள் மூலம் தெரிய வந்தது. ஃப்ராய்ட் உளப்பகுப்பாய்வு ரீதியாக ஆராய்ந்த போது, இயேசுவும், அவரது தாயும், திருமுழுக்கு யோவானும் உள்ள படத்தை வைத்து interpret பண்ணும் போது, அவரிடமிருந்த சமபால் விருப்பை விளக்குகிறார். உயிரோட்டமுடைய சிற்பங்களை செதுக்கிய மைக்கேல் ஏஞ்சலோ ஒரு சமபால் விருப்புடையவராக இருந்திருக்கிறார். சமீபத்தில் ஆலன் ட்யூரின் கேள்விப்பட்டிருக்க மாட்டோம் ஆனால் கணிணியைக் கேள்விப்பட்டிருப்போம், அதில் உள்ள algorithms, coding ஆகியவற்றை உருவாக்கியவர். அவர் ஒரு சமபால் விருப்புடையவர். ரிக்கி மார்ட்டின், ஆடம் லாம்பர்ட்,
லேடி காகா ஒரு Bisexual- ஆண் பெண் என இருவரிடமும் ஈர்ப்புக் கொள்பவர். தமிழில் "ஈரர்" எனலாம். இதே போல் நிறையப்பேர் இருக்கிறார்கள். அமெரிக்காவிலிருந்த மிகப்பெரிய எழுத்தாளர் அல்டேர் ரோட், கறுப்பினத்தைச் சார்ந்த பெண்ணியலாளர் ஒரு Lesbian. டி. ஹெச். லாரன்ஸ் ஒரு புதின ஆசிரியர். அவர் ஒரு சமபால் விருப்புடையவர் என்று ஆராய்ந்து சொல்லியிருக்கிறார்கள். கிங் ஜேம்ஸ் என்ற பிரிட்டனைச் சேர்ந்த ஒருவரும் சமபால் விருப்புடையவர் என்பதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன. கிரேக்க சமூகத்தில் மிகச் சாதாரண விடயமாக இருந்ததுதான் இது. மக்களின் ஆதரவைப் பெற்ற விடயமாகவும் இருந்தது. ரோம சமூகத்திலுமிருந்தது. இதை எப்போது தவறாகப்பார்க்க ஆரம்பித்தார்களெனில், தாமஸ் அக்கியூரஸ் என்ற கிறித்தவ மறையியலாளர், இயற்கைக்கு ஏதுவான சேர்க்கை, இயற்கைக்கு மாறான சேர்க்கை என்று அவர்தான் முதன் முதலில் எழுதினார். இனப்பெருக்கம் செய்வதற்காக பெண்ணுறுப்பு வழியாக கலவி செய்வது மட்டும்தான் இயற்கையான சேர்க்கை அதாவது மிஷனரி நிலையில் இருந்து கலவி செய்வதுதான் சரியானது என்று அவர்தான் சொன்னார். குடியேற்றக்காரர்கள் (காலனியாளர்கள்) கொண்டுவந்ததாக பெண்ணியலாளர்கள் சுட்டிக் காட்டுவார்கள். அவர் அப்படி எழுதி வைத்தார், பின்பு வந்த குடியேற்றக்காரர்கள், ஆட்சியாளர்கள் கிறித்தவ மதத்தைப் பரப்பினார்கள். இப்படியாக பழைய கலாச்சாரங்களிலிருந்து சமபால் சேர்க்கையை அழித்தார்கள். ஆணுமில்லாமல் பெண்ணுமில்லாமல் இருக்கும் மக்களை தென் அமெரிக்காவில் Two spirit people என்று சொல்வார்கள். இவர்களின் கலாச்சாரம் தாக்கியழிக்கப்பட்டது. அதற்கு முன் இருந்த சமபால் சேர்க்கை குறித்த தடயங்களை மொத்தமாக அழித்தார்கள். இது மாதிரியான நிறைய சமபால் சேர்க்கைக்கெதிரான செயல்கள் தேவாலயங்களில் இருந்தன. 1880 - இல் மெக்காலே காலத்தில்தான் சமபால் சேர்க்கை இயற்கைக்கு மாறானது என அறிவிக்கப்பட்டது. அதை Victorian view on sex or victorian mentality எனலாம். அதற்கு முன்பு வரை சமபால் சேர்க்கை நம் கலாச்சாரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருநங்கைகள், திருநம்பிகள் சமூகத்தில் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் என்னென்ன:
திருநங்கைகளும் திருநம்பிகளும் சமூகத்தில் அனுபவிக்கும் நிலை குறித்து முக்கியமாகச் சொல்லியாக வேண்டும். உங்களுக்கு அது நிறையத் தெரிந்திருக்கும். திருநங்கைகள் அவர்களை அவர்களே ஏற்றுக்கொள்வது முதல் விடயம். அவர்கள் ஏற்றுக் கொண்ட பிறகு அவர்களுடைய குடும்பத்தினர் எத்தனை விழுக்காடுகள் ஏற்றுக் கொள்கின்றனர் என்பதைப் பொறுத்துத்தான் அவர்களின் வாழ்க்கையே இருக்கிறது. திருநம்பிகள் பெண்ணாக இருந்து ஆணாக வரும்போது சமூகம் அவர்கள் மீது செலுத்தும் அழுத்தத்தை பின்பு பேசுவோம். திருநங்கைகளை எடுத்துக் கொண்டால் அவர்களுக்கு வீட்டினரிடமிருந்து கிடைக்கும் அழுத்தங்கள் முதலான பிரச்சனைகள், அவர்களின் மாற்றங்கள் அறிந்த பிறகு வீட்டிலிருந்து துரத்தப்படுதல் வரை. தங்கள் குழந்தை இப்படி வளர்ந்திருக்கிறது என்று தெரிந்தவுடன் பெற்றோர்கள் அரவணைத்திருந்தால் அவர்களுக்கு அந்தளவுக்கு சிரமங்கள் இருந்திருக்காது. அவர்களை வீட்டை விட்டு வெளியே விரட்டுவது, என்றான பின்பு அவர்கள் வயிற்றுப்பிழைப்புக்காக அவர்களின் வாழ்க்கையை எப்படி அமைத்துக் கொள்ள வேண்டுமென்ற தெரிவு அவர்களிடம் மட்டுமே இருக்கிறது. உண்மையச் சொன்னால் சமூகத்தின் தெருவோரத்தில்தான் அவர்கள் நிறுத்தப்பட்டுள்ளார்கள். திருநங்கை என்று சொன்னால் வெறும் விபச்சாரத்திக்கானவர்கள்தான் என்றுதான் சொல்வார்கள். ஆனால் அதற்குப் பின்னால் அவர்களின் அழுகுரலை எத்தனை பேர் யோசித்துப் பார்த்திருப்போம். எத்தனையோ பேரிடம் அவர்கள் பாலியல் அத்து மீறலை எதிர்க் கொண்டிருப்பார்கள். கண்டிப்பாக அனுபவித்திருப்பார்கள். நான் ஒரு கதையில் கூட படித்தேன். திருநங்கையின் கதைதான். வன்கலவி அவர்கள் மீது கட்டவிழ்த்து விடப்படுகிறது. காவல்துறை இவர்களை அடிக்கும் போது அவர்களுக்கு சிரமமாக இருக்கிறது.


பாலியல் தொழில் இல்லை பிச்சையெடுப்பது, இவை தவிர வேறு தொழில் இல்லை ........ஆம். இப்படியாகி விட்டது. இன்னொரு சிரமமான சூழ்நிலை வேலைக்குப் போனாலும் எத்தனை பேர் அவர்களை ஏற்றுக் கொள்கின்றனர் ? முதலில் அவர்களுக்குக் கல்வியறிவு இருக்கிறதா ? கல்வியே அவர்களுக்கு மறுக்கப்படுகிறது. பள்ளியில் படிக்கும்போது அந்த வளரிளம் பருவத்தில் (adult) உடலில் ஏற்படும் மாற்றங்களால் தன்னைத்தானே வெறுத்து வாழ வேண்டிய நிலை. தன்னுடலைத் தானே வெறுத்து வாழ்வதுதான் உலகத்திலேயே கொடுமையான விடயம் என்பேன். கொலை செய்வதும் கூட கொடுமையானதுதான். ஆனால் தானிருக்கும் உடலையே தானே வெறுத்து வாழ்வதை ஒரு நிமிடம் எல்லோரும் நினைத்துப் பார்க்க வேண்டும். சாலையில் போகும்போது திருநங்கைகளை வெறுப்புடன் பார்க்கும் நாம் இது பற்றி ஒரு நிமிடம் சிந்திக்க வேண்டும். இன்னொன்று திருநம்பிகளைப் பற்றிச் சொல்ல வேண்டும். அவர்கள் பெண்ணாக இருந்து ஆணாக மாறியவர்கள். இவர்கள் குறித்த விழிப்புணர்ச்சி குறைவு. திருநம்பிகளை பெண் சமபால் விருப்புக் கொண்டவர்கள் (Lesbians) எனத் தவறாகப் புரிந்து கொள்கிறார்கள். பெண்களிடம் ஈர்க்கப்படும் பெண்களையே Lesbians என்று சொல்கிறோம். பெண்ணாக இருந்து ஆணாக மாறும் பெண்களே திருநம்பிகள் ஆவர். இந்த திருநம்பிகள் பெண்களிடம் ஈர்ப்புக் கொள்ளும்போது அவர்களை Trans-men என்று அழைக்கலாம். பெண் வளர்கையில் அவளுக்குத் திருமணம் செய்து கொடுப்பதற்கே குடும்பத்தினர் முன்னுரிமை கொடுப்பர். அக்குழந்தை என்னவாக விரும்புகிறது என்பதைக் காட்டிலும் திருமணம் செய்து கொடுப்பதே சமூகச் சுழற்சியாக இருக்கிறது. இந்நிலையில் அவர்கள் உடலை வெறுத்து வாழ வேண்டும். வீட்டினரின் விருப்பத்தையும் திருமணம் செய்து கொள்ள வலியுறுத்துவது மாதிரியான அழுத்தங்களை எதிகொள்ள வேண்டும். இப்படியாக அவர்களது சிரமங்கள் இருக்கின்றன. அவர்கள் வெளியேறினாலும் சமூகம் அவர்களை எவ்வளவு ஏற்றுக் கொள்கிறது ? பாலியல் வன்முறை எல்லா இடங்களிலும் இருக்கிறது. திருநங்கைகள், திருநம்பிகள் என எல்லா வகை மூன்றாம் பாலினத்தவரும் சமூகத்தால் ஒதுக்கப்படுபவர்களாக, பந்தாடப்படுபவர்களாக, விளையாட்டுப்பொருளாகப் பார்க்கப்படுபவர்களாக இருக்கும் நிலை இருக்கிறது என்பதை வருத்தத்துடன் சொல்லிக் கொள்கிறேன். ஒரு நிமிடம் உங்கள் உடலை வெறுத்து வாழ்ந்து பாருங்கள் என்று உங்களிடம் கேட்டுக் கொள்கிறேன். அப்பேர்ப்பட்டவர்களை சமூகம் எப்படி வன்கலவி செய்கிறது என்பதையும் நீங்கள் நினைத்துப் பார்க்க வேண்டுகிறேன்.

அரவான் குறித்து ? அர்வானுக்குக் கோயில் கட்டிக் கும்பிடுகிறார்கள். அரவானே ஒரு திருநங்கையா ?

அரவான் அர்ச்சுனரின் மகன். அரவம் என்றால் தமிழில் பாம்பு என்று பொருள். அவருக்கு பாம்புக் குறியீடு உள்ளதை நிறைய இடங்களில் பார்க்கலாம். குருக்ஷேத்திரப் போர்க்காலங்களில் காளிக்கு பலி கொடுப்பதற்காக அர்ச்சுனரின் மகனைக் கேட்டார்கள். அதாவது வெட்டிப் பலி கொடுப்பது மாதிரி. அல்லது சில நேரம் அவரை அவரே வெட்டிக் கொண்டு சாகிறது மாதிரியும் இருக்கும். அரவான் தான் இதுவரை தாம்பத்ய இன்பமே அனுபவித்ததில்லை என்கிறார். திருமணத்திற்காக பெண்களைக் கேட்ட போது அடுத்த நாளே இறக்கப் போகிறவர் என்று மறுத்து விடுகிறார்கள். அதனால் விஷ்ணு மோகினி வேடத்தில் வந்து அவருக்கு மனைவியாக இருக்கிறார். பின்பு அரவான் பலி கொடுக்கப்படுகிறார். இந்த அரவான் நமது கலாச்சாரத்தில் ஆழமாக வேரூன்றியிருக்கிறார்.


பாலினத்தின் பல நிறங்கள், வானவில்லின் பல நிறங்கள் போல. நாங்கள் வானவில்லைத்தான் எங்கள் சின்னமாக வைத்திருக்கிறோம். LGBT - குழுவின் கொடி வானவில்தான். ஒரே நிறமாகத் தெரிந்தாலும் பல வண்ணங்களாகச் சிதறியிருக்கிறது.
எங்கள் மக்கள் வெளிவரும்போதுதான் எங்கள் பிரச்சனைகள், குரல்கள், செய்திகள் மக்களுக்கு வெளிப்பட ஆரம்பிக்கும். திருநங்கைகள் ஊடக வெளிச்சம் படுவதற்கு முன்பிருந்ததற்கும், தற்போதிருக்கும் மக்கள் மனநிலைக்கும் வேறுபட்டுள்ளது. ஒவ்வொரு விடயமும் வெளிவரும்போதுதான், கலைத்துறையாகட்டும், இலக்கியத்துறையாகட்டும் சரி எங்களைப் பற்றித் தெரியவரும்...